Latest Past Events

புக்காரா விமானத் தாக்குதலில் பலியான மாணவச் செல்வங்களின் 30 ஆம் ஆண்டு நினைவுநாள்

london

1995 இல் , நாகர் கோவில் பாடசாலை ஒன்றில் நடந்த புக்கரா விமானத் தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவாக, இன்று நினைவு நாள் லண்டனில் உள்ள நாகேஸ்வரா மக்கள் அமைப்பினால் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, அப்பாவி மாணவர்களின் உயிரிழப்பை நினைவுகூறுவதற்காகவும், அவர்களின் தியாகத்தை போற்றுவதற்காகவும் ஒழுங்கமைக்கப்பட்டது. நிகழ்வில், மாணவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நினைவு பலகை நிறுவப்பட்டது, மேலும் அவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவாக விளக்குகள் ஏற்றப்பட்டு, அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினரும், உறவினர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு, அவர்கள் மீது தங்களது மரியாதையை செலுத்தினர். இது போன்ற நினைவு நிகழ்வுகள், கடந்த காலத்தில் நடந்த மாபெரும் சோகங்களை மறக்காமல், வருங்கால சந்ததியினருக்குப் பாடமாகவும் அமைவது மிக முக்கியம். அப்பாவி மாணவர்களின் உயிரிழப்பு எவ்வளவு பெரிய கொடூரம் என்பதை உணர்த்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாதென்பதை சமூகத்திற்குத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நினைவுநாள், அவர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் மறக்க முடியாததென்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

நாகேஸ்வரா மக்கள் அமைப்பின் யாப்பு சம்மந்தமான பொதுக்கூட்டம்

whatsapp

புலம்பெயர் நாகேஸ்வரா உறவுகள் அனைவருக்கும் வணக்கம் வருகின்ற 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் மு.பகல் 11.00 மணிக்கு நாகேஸ்வரா மக்கள் அமைப்பின் யாப்பு சம்மந்தமான பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதனால் புலம்பெயர் தேசத்தில் வாழும் நாகேஸ்வரா மக்கள் அனைவரும் தவறாது சமூகம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் நாகேஸ்வரா மக்கள் அமைப்புக்கு யாப்பு தயாரித்து அதனை மக்களின் பார்வைக்காக பதிவிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ளது. எனவே புலம்பெயர் வாழ் நாகேஸ்வரா உறவுகளே யாப்பு பற்றி கதைப்பதற்கான பொதுக்கூட்டமே அனைவரும் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். யாப்பு சீர்திருத்தம் பற்றி மட்டுமே கதைக்கப் படும் என்பதை அறியத் தருகின்றோம் பொதுக்கூட்டம் WhatsApp வழியாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் எமது தளத்தில் எழுதியோ அல்லது எமது நிர்வாக உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் யாப்பு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வாக்களிப்பவர்கள் எமது அமைப்பில் அங்கத்தவராக இருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவராக கருதப்படும் மாற்றம் ஏதும் இருப்பின் அறியத் தருகின்றோம் இதுவரை அங்கத்தவராக இணையாமல் இருக்கும் எமது உறவுகள் படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் எமது அமைப்பின் மின்னஞ்சலுக்கு அனுப்பி எமது அமைப்பை மென் மேலும் வளர்ச்சி பெற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது White And Blue Gradient Modern Invoice.pdf நன்றி.

உறுப்பினராக சேர்ந்து உங்கள் நிகழ்வுகளைக் காண்பிக்க எங்களை அழைக்கவும்

நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, எவ்வளவு அன்பை கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

பயனுள்ள இணைப்புகள்

விரைவு இணைப்புகள்

தொடர்பு தகவல்

© 2024 Created with Design & Developed by Xelite Software Solutions